படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா

நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

நீலகிரி: நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை, என நான்கு சீமைகளாக ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர்.

வருடந்தோரும் மார்ச் மாத இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கி மறு நாள் காலை விவசாய நிலங்களில் விதை விதைப்பு நடைபெறும். மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட 33 படுகரின கிராம மக்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கீழ் அப்புகோடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் மேல தால நடனங்களுடன் கோவிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.



இந்த வருடம் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும் என்பதோடு, நிறைவான மழை பொழிவுக்காகவும், விவசாயிகள் நலம் காக்க வேண்டியும் வருடந்தோரும் விதைப்பு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...