நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.
நீலகிரி: நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.
ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை, என நான்கு சீமைகளாக ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர்.
வருடந்தோரும் மார்ச் மாத இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கி மறு நாள் காலை விவசாய நிலங்களில் விதை விதைப்பு நடைபெறும். மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட 33 படுகரின கிராம மக்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கீழ் அப்புகோடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் மேல தால நடனங்களுடன் கோவிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

இந்த வருடம் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும் என்பதோடு, நிறைவான மழை பொழிவுக்காகவும், விவசாயிகள் நலம் காக்க வேண்டியும் வருடந்தோரும் விதைப்பு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை, என நான்கு சீமைகளாக ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர்.
வருடந்தோரும் மார்ச் மாத இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கி மறு நாள் காலை விவசாய நிலங்களில் விதை விதைப்பு நடைபெறும். மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட 33 படுகரின கிராம மக்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கீழ் அப்புகோடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் மேல தால நடனங்களுடன் கோவிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

இந்த வருடம் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும் என்பதோடு, நிறைவான மழை பொழிவுக்காகவும், விவசாயிகள் நலம் காக்க வேண்டியும் வருடந்தோரும் விதைப்பு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.