மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை: மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த சையத் கூறுகையில், "இந்த மரம் நம் முன்னோர்களால் நடப்பட்டது. இதன் வயது சுமார் 150- ஆக இருக்க வாய்ப்புள்ளது.
மரம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இன்று கிளை விழுந்தது நாளை மரமே விழ வாய்ப்புள்ளது.
இது போன்று கோவையில் பல இடங்களில் மரம் சிதிலமடைந்து உள்ளது. அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை பாராமரிப்பது எவ்வுளவு முக்கியமோ அதே போல் அதன் இறுதி காலத்தில் அதனை அகற்றுவதும் முக்கியம்." என்றார்.

இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த சையத் கூறுகையில், "இந்த மரம் நம் முன்னோர்களால் நடப்பட்டது. இதன் வயது சுமார் 150- ஆக இருக்க வாய்ப்புள்ளது.
மரம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இன்று கிளை விழுந்தது நாளை மரமே விழ வாய்ப்புள்ளது.
இது போன்று கோவையில் பல இடங்களில் மரம் சிதிலமடைந்து உள்ளது. அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை பாராமரிப்பது எவ்வுளவு முக்கியமோ அதே போல் அதன் இறுதி காலத்தில் அதனை அகற்றுவதும் முக்கியம்." என்றார்.