வேவு பார்க்கிறது பேஸ்புக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாகவும், அந்த இணையதளங்களை பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் தகவல் திருடப்படுவதாக வந்த செய்தியை அடுத்து உலகம் முழுவதும் பேஸ்புக்-கிற்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளது. மேலும், #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. இந்த சூழலில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.



ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தை நீக்கினாலும், அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவு பார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் தகவலை கிலிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும், பயனாளர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இணையம் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...