ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, அம்மாவட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த சூழலில், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக இன்று காலை வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, அம்மாவட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த சூழலில், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக இன்று காலை வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.