முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 86 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
கோவை: முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 86 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.130.46 கோடி மதிப்பில் பவானி கூட்டு குடிநீர் திட்டத்தையும் ரூ.215.51 கோடி மதிப்பிலான ஆத்துபாலம் முதல் உக்கடம் வரையிலான மேம்பால அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்ட பேரவை துனை சபாநாயகர் ஜெயராமன், மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருமண நடைபெறும் இடத்திற்கு வந்த முதலமைச்சருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர். விழாவின் தொடக்கத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க 86 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆசீர்வதிக்க நடைபெற இந்த திருமணத்தில், புதிய தம்பதிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, குடம்,உள்ளிட்ட 70 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐயாயிரதிற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
