தீ விபத்து குறித்து அவசரக் கால மீட்பு குழுவினர் நடத்திய பயிலரங்கு

கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.

கோவை: கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.

கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிலரங்கில் வெவ்வேறு விதமான தீ விபத்துகளை கையாள்வது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.



சூழலியல் ஆர்வலரான முகம்மது சலீம் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு வனப்பரப்புகளில் தீ விபத்து ஏற்படுவதால் சூழலியல் சக்கரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.



பி.எஸ்.ஜி. குழுமத்தின் பாதுகாப்பு அதிகாரி கலந்து கொண்டு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை பயிற்சிகளை தன்னார்வலர்களுக்கு அளித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...