திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
திருப்பூர் : கோடை விடுமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் அமையும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்." என்றார்.
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்." என்றார்.