திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
திருப்பூர் : திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியங்கிரி நேற்று இரவு தனது நண்பர்கள் இருவருடன் கார் மூலம் திருநள்ளாறு கோவில் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி வந்தார்.
கார் காங்கேயம் சாலையை கடந்து வளம் பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது காரின் முன்புறம் உள்ள ஹெட்லைட்டில் திடீரென புகை வந்துள்ளது . இதனைக் கண்டு உடனடியாக காரை ஓட்டி வந்த வெள்ளியங்கிரி மற்றும் அவரது நண்பர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியங்கிரி நேற்று இரவு தனது நண்பர்கள் இருவருடன் கார் மூலம் திருநள்ளாறு கோவில் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி வந்தார்.
கார் காங்கேயம் சாலையை கடந்து வளம் பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது காரின் முன்புறம் உள்ள ஹெட்லைட்டில் திடீரென புகை வந்துள்ளது . இதனைக் கண்டு உடனடியாக காரை ஓட்டி வந்த வெள்ளியங்கிரி மற்றும் அவரது நண்பர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.