ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்., 16 வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது. 

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. எனவே, அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவுபடுத்தினர். ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கார்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் எனவும் பேசப்பட்டது. 

இதையடுத்து, தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. மேலும், கார்த்தியின் மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு மூன்று வார அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால பாதுகாப்பு எதுவும் வழங்கக்கூடாது என்றும் கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கார்த்திக்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...