தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, குற்றவாளிகளை விரைவில் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ், சுந்தரன், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு எதிரிகளைப் பல இடங்களில் தேடி கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், குற்ற வழக்கில் தொடர்புடைய கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஊட்டி வெல்பெக் எஸ்டேட் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (33) ஆகிய 2 பேரை கண்டுபிடித்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பிடிபட்ட இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தீவிர முயற்சி செய்து நேற்று இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவினை பெற்றார். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சார்வு செய்யப்பட்டது.



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...