கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பீகாரில் கடந்த 1980 மற்றும் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கால்நடை தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி இரசீதுகள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஐந்து வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன. இந்த ஊழல் அனைத்தும், காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு, பீகார் முதலமைச்சர்களாக இருந்தபோது நடந்தவையாகும். இதுவரை மூன்று வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தும்கா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி எடுத்ததாகத் தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில், கடந்த 19-ம் தேதியன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்திருந்தார். லாலுவுடன் அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதில், லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பீகாரில் கடந்த 1980 மற்றும் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கால்நடை தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி இரசீதுகள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஐந்து வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன. இந்த ஊழல் அனைத்தும், காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு, பீகார் முதலமைச்சர்களாக இருந்தபோது நடந்தவையாகும். இதுவரை மூன்று வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தும்கா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி எடுத்ததாகத் தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில், கடந்த 19-ம் தேதியன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்திருந்தார். லாலுவுடன் அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதில், லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.