காட்டு தீ குறித்த சாட்டிலைட் தகவல்களை அனுப்ப உத்தரவு: குரங்கணி தீவிபத்து போன்று நிகழாமல் இருக்க நடவடிக்கை

குரங்கணி காட்டுத் தீயைப் போன்ற கோர சம்பவம் இனி நிகழாமல் இருக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ குறித்த சாட்டிலைட் தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


குரங்கணி காட்டுத் தீயைப் போன்ற கோர சம்பவம் இனி நிகழாமல் இருக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ குறித்த சாட்டிலைட் தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறட்சி, வெப்பம் காரணமாக வனப்பகுதியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. வனப்பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலுக்குச் செல்பவர்கள், வன விளைபொருட்களை சேகரிக்க செல்பவர்களின் அலட்சியத்தாலும், வனவிலங்கு வேட்டைக் கும்பல்களின் சூழ்ச்சியின் காரணமாகவும் வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் காட்டுத் தீயைக் கண்காணிக்க, சென்னையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் சாட்டிலைட் உதவியுடன் செயல்படும் கட்டுப்பாடு, கண்காணிப்பு அறை உள்ளது.

தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதம் வனமாக இருக்கிறது. இதில், பசுமை மாறாத வனமாக 3 சதவீத பகுதியிலும், மிதமான பசுமை கொண்ட வனமாக 9 சதவீத பகுதியும் இருக்கிறது. இந்த வனப்பகுதி கடந்த ஆண்டில் மாநில அளவில் வனப்பகுதிகளில் 114 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஆனால், நடப்பாண்டில் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இது போன்ற கோர சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், காட்டுத் தீ பரவினால் சாட்டிலைட்டில் பதிவாகும் தகவலை சம்பந்தப்பட்ட மாவட்ட வனஅலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், " கடல் மட்ட உயர கணக்கின் படியும், புவியியல் தகவல் அடிப்படையிலும் பதிவாகும் தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டும். அந்த இடத்தில் தீ எவ்வளவு நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது, தீயில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்களை விரைந்து சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலம் முடியும் வரை மாநில அளவில் வனப்பகுதியில் காட்டு தீயைக் கண்காணிக்க ரோந்து குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும். வனத்தில் புகை மூட்டம் காணப்பட்டால் தீ தடுப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். வனத்தில் அபாயம் உள்ள இடங்களில் மக்களை அனுமதிக்கக் கூடாது. கோயில் வனம், சுற்றுலா வனங்களில் வனத்துறையினர் அனுமதி பெற்ற பின்னரே, பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மக்கள் சென்று வரும் வனப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காட்டுத் தீயை கண்காணிக்கவும், உயிர்ச்சூழல் பாதுகாக்கவும் உதவும்", என்றார்.

காட்டுத் தீ பரவினால் சாட்டிலைட்டில் பதிவாகும் தகவலை சம்பந்தப்பட்ட மாவட்ட வனஅலுவலகத்திற்கு அனுப்பும் இந்த திட்டம் வரவேற்கத்தக்க வகையில் இருந்தாலும், இதுபோன்ற திட்டங்கள் முன்னரே செயல்படுத்தப்பட்டிருந்ததால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 20 பேரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...