ஈரோட்டில் இன்று தி.மு.க., மாநாடு: மேளதாளங்களுடன் புறப்பட்ட தி.மு.க. தொண்டர்கள்

ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

மேட்டுப்பாளையம்: ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் ஈரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் காரமடை நால்ரோடு பகுதில் இருந்து மேளதாளங்களுடன் சுமார் 50 வாகனங்களில் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க., ஆதரவு பெண்கள் ஆர்வத்துடன் முளைப்பாரி எடுத்து வந்து மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். மாநாட்டிற்கான வாகனங்களை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் கொடி அசைத்து வழி அனுப்பிவைத்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...