ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.
மேட்டுப்பாளையம்: ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.
ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் ஈரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் காரமடை நால்ரோடு பகுதில் இருந்து மேளதாளங்களுடன் சுமார் 50 வாகனங்களில் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க., ஆதரவு பெண்கள் ஆர்வத்துடன் முளைப்பாரி எடுத்து வந்து மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். மாநாட்டிற்கான வாகனங்களை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் கொடி அசைத்து வழி அனுப்பிவைத்தார்.
ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் ஈரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் காரமடை நால்ரோடு பகுதில் இருந்து மேளதாளங்களுடன் சுமார் 50 வாகனங்களில் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க., ஆதரவு பெண்கள் ஆர்வத்துடன் முளைப்பாரி எடுத்து வந்து மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். மாநாட்டிற்கான வாகனங்களை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் கொடி அசைத்து வழி அனுப்பிவைத்தார்.