சைனீஸ் காய்கறிகளுக்கு மலைத்தோட்ட விவசாயிகளிடையே அதிக மவுசு

அதிகளவு வருமானம் தரக்கூடியது என்பதால், மலைதோட்ட காய்கறிகளுக்கு மாற்றுப் பயிரான சைனீஸ் காய்கறிகளை நீலகிரி விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.


நீலகிரி: அதிகளவு வருமானம் தரக்கூடியது என்பதால், மலைதோட்ட காய்கறிகளுக்கு மாற்றுப் பயிரான சைனீஸ் காய்கறிகளை நீலகிரி விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு சமவெளி பிரதேசங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மலை காய்கறிகளுக்கு மாற்றுப் பயிராக கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த கொய்மலர் சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்காத நிலையில், தற்போது, இந்த கொய்மலர் சாகுபடிக்காக அமைக்கப்பட்ட பசுமை குடில்களை சைனீஸ் காய்கறிகளான செல்ரி, புருக்கோலி, சைனீஸ் கேபேஜ், ஐஸ்ப்ரூக், ரோமன் உள்ளிட்ட 18 வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.



இங்கு விளையும் சைனீஸ் காய்கறிகளை, சென்னை, ஐதராபாத், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த விவசாயத்திற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், தற்போது நீலகிரி மாவட்டம் கிராமப் பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளை விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். தற்போது நல்ல மகசூல் கொடுத்து வரும் இந்த வகை காய்கறிகளை, வரும் காலங்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...