திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதர்சன், சமீர்கான், மனோகர் மற்றும் சுபாஷ் ஆகியோர் 11ம் வகுப்பு பயின்று வருகின்றனர். தேர்வுக்காகப் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நால்வரும் தங்கள் நண்பர் மூவருடன் வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றனர்.
நீரில் இறங்கிக் குளித்த பொழுது சுதர்சன்,சமீர் மற்றும் மனோகர் மூவரும் ஒன்றன் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். அதனைப் பார்த்த அவர்களது நண்பர்கள் உடனடியாக மேலே வந்து அவர்களை காப்பாற்றுமாரு கூச்சலிட்டனர். ஆனால் நீரில் மூழ்கிய மூவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மங்கலம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி இறந்த மூன்று மாணவர்களில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்து மூன்று மாணவர்கள் பாறைக்குழியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதர்சன், சமீர்கான், மனோகர் மற்றும் சுபாஷ் ஆகியோர் 11ம் வகுப்பு பயின்று வருகின்றனர். தேர்வுக்காகப் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நால்வரும் தங்கள் நண்பர் மூவருடன் வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றனர்.
நீரில் இறங்கிக் குளித்த பொழுது சுதர்சன்,சமீர் மற்றும் மனோகர் மூவரும் ஒன்றன் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். அதனைப் பார்த்த அவர்களது நண்பர்கள் உடனடியாக மேலே வந்து அவர்களை காப்பாற்றுமாரு கூச்சலிட்டனர். ஆனால் நீரில் மூழ்கிய மூவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மங்கலம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி இறந்த மூன்று மாணவர்களில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்து மூன்று மாணவர்கள் பாறைக்குழியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.