கவுரவ விரிவுரையாளரின் சான்றிழ்கள் வாட்ஸ்அப்பில் பரப்பிய விவகாரம் : கல்வித்துறை தலையிட வலியுறுத்தல்

உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளரின் சான்றிதழ்கள் போலி என வாட்ஸ்அப்பில் பரவச் செய்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


உதகை : உதகை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளரின் சான்றிதழ்கள் போலி என வாட்ஸ்அப்பில் பரவச் செய்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் பேராசிரியரின் சான்றிதழ்களின் நகல்களை, நிரந்தர பேராசிரியர் ஒருவர் கல்லூரி வாட்ஸ்அப் குழுவில் அவை போலியானவை என அவதூறு பரப்பி வருவதாக கவரவ விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இது குறித்து கவுரவ விரிவுரையாளர் கூறுகையில், "உதகை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் கவுரவ விரிவுரையாளரின் பணிக்கான நேர்காணலின் போது சான்றிதழ்கள் சரிபார்க்க கொடுக்கப்பட்டது. அவ்வாறு கொடுக்கப்பட்ட சான்றிதழ்களை எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர். தன்னைக் கேவலப்படுத்தும் வகையில் எனது சான்றிதழ்களை வாட்ஸ் அப்பில் பதிவு செய்தது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்டத் துறை மற்றும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், கல்லூரி இயக்கமும் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பேராசியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார். 

இந்த விவகாரத்தின் மூலம் உதகை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களிடையே பனிப்போர் வெடித்துள்ளது. இதனால், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக தீர்வு காணவேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...