சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார்.
சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார்.
நியூயார்க் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர்' என்னும் சர்வதேச பத்தாண்டு (2018 - 2028) செயல்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ கலந்து கொண்டார். அப்போது, உலகில் அதிவேகமாக வற்றி வரும் நதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மரப்போர்வையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான நதிகள் காடுகளிலிருந்து தோன்றியுள்ளதால், நம்மால் காடுகளை மீண்டும் உருவாக்க முடியும். மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து, போது மானமரங்கள் இருந்தால், மண் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, "தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு, தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம் வகிக்கும் பங்கு : ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் சவால்களை சந்தித்து வாய்ப்புகளைக் கைப்பற்றுவது" குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க ஐ.நா. பொதுசபையின் தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
நியூயார்க் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர்' என்னும் சர்வதேச பத்தாண்டு (2018 - 2028) செயல்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ கலந்து கொண்டார். அப்போது, உலகில் அதிவேகமாக வற்றி வரும் நதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மரப்போர்வையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான நதிகள் காடுகளிலிருந்து தோன்றியுள்ளதால், நம்மால் காடுகளை மீண்டும் உருவாக்க முடியும். மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து, போது மானமரங்கள் இருந்தால், மண் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, "தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு, தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம் வகிக்கும் பங்கு : ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் சவால்களை சந்தித்து வாய்ப்புகளைக் கைப்பற்றுவது" குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க ஐ.நா. பொதுசபையின் தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.