சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி ஐ.நா.வில் உரையாற்றிய ஜக்கி வாசுதேவ்

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார்.

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார். 

நியூயார்க் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர்' என்னும் சர்வதேச பத்தாண்டு (2018 - 2028) செயல்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ கலந்து கொண்டார். அப்போது, உலகில் அதிவேகமாக வற்றி வரும் நதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மரப்போர்வையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 



தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான நதிகள் காடுகளிலிருந்து தோன்றியுள்ளதால், நம்மால் காடுகளை மீண்டும் உருவாக்க முடியும். மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து, போது மானமரங்கள் இருந்தால், மண் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும்" என்றார்.  

இதைத்தொடர்ந்து, "தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு, தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம் வகிக்கும் பங்கு : ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் சவால்களை சந்தித்து வாய்ப்புகளைக் கைப்பற்றுவது" குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க ஐ.நா. பொதுசபையின் தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...