கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காதல் மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலை பேட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கவுசல்யாவின் தந்தை, தாய் உட்பட 11 பேரை கைது செய்தனர்.
கோவை : கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காதல் மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலை பேட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கவுசல்யாவின் தந்தை, தாய் உட்பட 11 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது. தன்னம்பிக்கை, தளராத மனம் கொண்ட கவுசல்யா மெல்ல மெல்ல இந்தக் கொடூர தாக்குதலில் இருந்து விடுபட்டு, சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.
இந்த ஆணவக் கொலையை சில சாதி சங்கங்கள் பெருமையாகவும், அவ்வாறு கொலை செய்பவர்களை சாதியின் போராளிகளாகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு சாதி சங்கங்களில் இருந்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதோடு, எவ்வித உதவிக்கும் தங்களை அணுகுமாறு அந்த சாதி சங்க உறுப்பினர்கள் அன்னலட்சுமியிடம் கூறிச் சென்றனர். மேலும், அதனை சமூக வலைத்தளங்களில் பெருமையாக பதிவு செய்துள்ளனர். பசும்பொன் தேசிய கழகத்தைச் சேர்ந்தவர்கள், கவுசல்யாவின் தந்தையான சின்னசாமி குடும்பத்திற்கு ரூ.1,26,000 வழங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மேலும், ஒரு சாதி சங்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். இந்த சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணம் வழங்கியதை பெருமையாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதை ஒரு கோலாகல விழாவாகவே கொண்டாடினர் என்று கூட சொல்லி விட முடியும்.

ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இந்திய அரசிடம் வலியுறுத்தியும், கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த பின்னரும், இவ்வகையான குற்றங்களை சாதி வெறியர்கள் கவுரவமாகவே கருதி வருகின்றனர்.
திராவிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியமைத்துள்ள தமிழக அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது சாதி மறுப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது. தன்னம்பிக்கை, தளராத மனம் கொண்ட கவுசல்யா மெல்ல மெல்ல இந்தக் கொடூர தாக்குதலில் இருந்து விடுபட்டு, சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.
இந்த ஆணவக் கொலையை சில சாதி சங்கங்கள் பெருமையாகவும், அவ்வாறு கொலை செய்பவர்களை சாதியின் போராளிகளாகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு சாதி சங்கங்களில் இருந்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதோடு, எவ்வித உதவிக்கும் தங்களை அணுகுமாறு அந்த சாதி சங்க உறுப்பினர்கள் அன்னலட்சுமியிடம் கூறிச் சென்றனர். மேலும், அதனை சமூக வலைத்தளங்களில் பெருமையாக பதிவு செய்துள்ளனர். பசும்பொன் தேசிய கழகத்தைச் சேர்ந்தவர்கள், கவுசல்யாவின் தந்தையான சின்னசாமி குடும்பத்திற்கு ரூ.1,26,000 வழங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மேலும், ஒரு சாதி சங்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். இந்த சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணம் வழங்கியதை பெருமையாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதை ஒரு கோலாகல விழாவாகவே கொண்டாடினர் என்று கூட சொல்லி விட முடியும்.

ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இந்திய அரசிடம் வலியுறுத்தியும், கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த பின்னரும், இவ்வகையான குற்றங்களை சாதி வெறியர்கள் கவுரவமாகவே கருதி வருகின்றனர்.
திராவிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியமைத்துள்ள தமிழக அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது சாதி மறுப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.