ஈரோடு தி.மு.க மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை : ஈரோடு தி.மு.க மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தி.மு.க மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம், அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், செல்வி, டி.ஆர்.டி.ராஜா ஆகியோரும் வந்தனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின்போது, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க உயர்மட்ட செயற்திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தி.மு.க மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம், அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், செல்வி, டி.ஆர்.டி.ராஜா ஆகியோரும் வந்தனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின்போது, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க உயர்மட்ட செயற்திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.