அடிப்படை வசதிகள் வேண்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உக்கான் நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்றவற்றை செய்து கொடுக்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பிலும் மனு அளித்தும் நடவடிக்கை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...