அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உக்கான் நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்றவற்றை செய்து கொடுக்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பிலும் மனு அளித்தும் நடவடிக்கை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உக்கான் நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்றவற்றை செய்து கொடுக்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பிலும் மனு அளித்தும் நடவடிக்கை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.