கோவையில் 4 நாட்களுக்கு வெயில் : வேளாண் பல்கலை.,

கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலுக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலுக்கு வாய்ப்புள்ளதாக வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் கடந்த வாரம் பெய்த மழையின் அளவு சராசரியாக 40 மி.மீ வரை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தென்னை மரங்களுக்குத் தேவையான நீர் கிடைத்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களைப் பொறுத்த வரையில் கோவையில் வானம் தெளிவாக இருக்கும். காலை நேரங்களில் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும்.

திருப்பூரில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மற்றும் உதகையைப் பொறுத்தவரையில் மழைக்கான குறைவு. கோவையை பொறுத்த வரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் விவசாயிகள் மிகிழ்ச்சியில் உள்ள நிலையில் அடுத்த அறுவடைக்குத் தயாராக நிலங்களை உழவு செய்ய இந்த மழை கை கொடுத்துள்ளது. 

தற்போது உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யலாம். அதே நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் 200 மி.மீ மழை கடந்த முறை பெய்துள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்புள்ளது. ஆனால், கோவையில் 40 மி.மீ மழை மட்டுமே பெய்த காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டும் உயர வாய்ப்பு குறைவு." என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...