திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தனியாருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தனியாருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

பல்லடம் அருகே கரடிவாவிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). அதே பகுதியில் விசைத்தறித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு கரடிவாவி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கிருஷ்ணசாமியின் விசைத்தறிக் கூடத்தின் மேற்கூரைகள் பறந்து, சுவர்கள் இடிந்தன. .மேலும் கூடத்தில் இருந்த விசைத்தறிகள், துணி வகைகள் சேதமடைந்தன.

இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், “எனக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இத்தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.இந்த விபத்தால் நானும் என் குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.” என்றார்.

பல்லடம் அருகே கரடிவாவிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). அதே பகுதியில் விசைத்தறித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு கரடிவாவி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கிருஷ்ணசாமியின் விசைத்தறிக் கூடத்தின் மேற்கூரைகள் பறந்து, சுவர்கள் இடிந்தன. .மேலும் கூடத்தில் இருந்த விசைத்தறிகள், துணி வகைகள் சேதமடைந்தன.

இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், “எனக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இத்தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.இந்த விபத்தால் நானும் என் குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.” என்றார்.