காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



 

திருப்பூர் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யகுமார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான 4 சென்ட் இடம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வீட்டின் பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் செய்து ரூ. 7.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். சுமார் இரண்டு வருடகாலமாக வட்டி தொகை கட்டாத காரணத்தால், சூர்யகுமாரின் இடத்தை தெய்வசிகாமணி தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதையறிந்த சூர்யகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால், மனமுடைந்த சூர்யகுமார், இன்று திருப்பூர் வீரபாண்டி காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...