ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் நிறுவனம் ரூ. 10 லட்சம் டாலர் ஆதாயம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த மோசடி வழக்கில், கடந்த பிப்.,28-ம் தேதி சென்னையில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி பின்னர் திகார் சிறையில் அடைத்தனர். இதனிடையே, தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கி உத்தரவிட்டனர். பிணைத்தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் நிறுவனம் ரூ. 10 லட்சம் டாலர் ஆதாயம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த மோசடி வழக்கில், கடந்த பிப்.,28-ம் தேதி சென்னையில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி பின்னர் திகார் சிறையில் அடைத்தனர். இதனிடையே, தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கி உத்தரவிட்டனர். பிணைத்தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.