மண்டல அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி கோவையில் தொடக்கம்

தென் மண்டல அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை: தென் மண்டல அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, லீக் சுற்று முறையில் நடத்தப்பட்டு முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு இரண்டாம் இடம் பெறும் அணிகள் தகுதி பெறும். நேற்று தொடங்கிய இந்த போட்டியை கோவை மாவட்ட வருமான வரித்துறை ஆணையர் லக்‌ஷ்மி ஹந்தே புரி மற்றும் கோவை அரசு கலை கல்லூரி பேராசிரியரும் முன்னாள் கைப்பந்து வீராங்கனையுமான கோதை ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

முதல் போட்டியில் சென்னை ஜே.பி.ஆர் பெண்கள் கல்லூரி மற்றும் கோவை காருண்யா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால், எந்த அணி வெற்றி பெரும்? என்ற பரபரப்பு ஏற்பட்டது. முதல் செட்டில் காருண்யா பல்கலை அணி 26-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது செட்டில் ஜே.பி.ஆர் கல்லூரி அணி 25-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது செட்டில் காருண்யா பல்கலை அணி 25-23 என்ற புள்ளி கணக்கிலும், நான்காவது செட்டில் 25-21 என்ற புள்ளி கணக்கில் காருண்யா பல்கலை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ந்து, இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் கேரள செயிண்ட் மேரிஸ் பெண்கள் அணியை எதிர்த்து அவிநாசிலிங்கம் பல்கலை அணி மோதுகிறது. மற்றொரு போட்டியில் பி.கே.ஆர் கோபி செட்டிபாளையம் அணியை எதிர்த்து காருண்யா அணி விளையாடுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...