குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையில் ஹோட்டல் நடத்தி வந்தவர் கண்ணன். இவரது கடைக்கு அவரது மனைவியின் தம்பி பிரபு (26) அடிக்கடி வந்து குடி போதையில் தகராறு செய்துள்ளார். இதனை கண்ணன் தட்டிக் கேட்கவே கடந்த 2017-ம் ஆண்டு கண்ணனை பெட்ரோல் ஊத்தி எரித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து பிரபுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு இன்று கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவையில் ஹோட்டல் நடத்தி வந்தவர் கண்ணன். இவரது கடைக்கு அவரது மனைவியின் தம்பி பிரபு (26) அடிக்கடி வந்து குடி போதையில் தகராறு செய்துள்ளார். இதனை கண்ணன் தட்டிக் கேட்கவே கடந்த 2017-ம் ஆண்டு கண்ணனை பெட்ரோல் ஊத்தி எரித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து பிரபுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு இன்று கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.