மேட்டுப்பாளையத்தில் பெய்த மழையால் நிரம்பிய வனக்குட்டைகள்

மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பெய்த மழையால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியது.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பெய்த மழையால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரங்களில் அதிகபட்சமாக இரண்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. 

இதன் காரணமாக, இப்பகுதிகளில் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிய கடும் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து போன குளம் குட்டைகளில் ஓரளவு தண்ணீர் மீண்டும் தேங்க தொடங்கியது.

இவ்வாண்டு தொடக்கம் முதலே நிலவிய வறட்சியான சூழலால் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்து வந்தது. இதே போல காடுகளுக்குள் விலங்குகளின் தாகம் தீர்க்கும் நீராதாரங்களும் வறண்டதால் வன உயிரினங்களும் தவித்துப்போயின. 

தற்போது பெய்து வரும் மழை, இப்பிரச்சனையை ஓரளவேனும் தவிர்க்கும் விதமாக அமைந்துள்ளது. வனக்குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் அவற்றைத் தேடி வரும் யானை, மான், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்து வருகின்றன. மேலும், சாரல் மழை காரணமாக புற்கள் வளர்ந்துள்ளதால் தீவனமும் கிடைத்து வருகிறது. 

குட்டைகளிலும், தடுப்பணைகளிலும் நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்களின் தேவை பூர்த்தியாகியுள்ளது. இது போன்று அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே எதிர் கொள்ளவுள்ள கோடை காலத்தின் வறட்சியை சமாளிக்க இயலும் என்கின்றனர் விவசாயிகள்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...