பத்மஶ்ரீ நானம்மாளுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த கோவை ரோட்டரி சங்கத்தினர்

மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோவை : மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.



அவினாசி ரோட்டில் அமைந்துள்ள சேம்பர்ஸ் டவர் வளாகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் சாண்டியாகோ ஜேசு, செயலாளர் ஜ்யோதீஷ் பிள்ளை மற்றும் சிறப்பு வருந்தினர் K.S.பிள்ளை ஆகியோர் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பத்மஶ்ரீ நானம்மாளிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தன் குடும்பனத்தினரோடு கலந்துகொண்ட நானம்மாள், யோக கலையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.

அவர் பேசுகையில், 'யோக கலை, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். அனைவரும் யோகாசனங்கள் செய்து, நோயில்லாத வாழ்வை பெற வேண்டும். கீரை, கம்பு, சிறுதானியம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 99 வயதிலும் தளராமல், நான் யோகா செய்வதற்கு, இயற்கை சார்ந்த உணவு பழக்கவழக்கம் தான் காரணம்' என்று கூறினார்.

அத்தோடு, உடலுக்கு வலிமை தரும் சில முக்கியமான யோகாசனங்களையும் மேடையில் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய கோவை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சாண்டியாகோ ஜேசு, 'டில்லியில், குடியரசு தலைவர் கைகளால் பத்மஶ்ரீ விருது வாங்கிய பின், நானம்மாள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். கோவைக்கு பெருமை தேடிதந்த அவரை, ரோட்டரி சங்கம் சார்பாக முதலாவதாக கெளரவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...