மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கோவை : மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஶ்ரீ விருது' பெற்ற யோகக் கலை பயிற்றுனர் நானம்மாள்-க்கு, கோவை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அவினாசி ரோட்டில் அமைந்துள்ள சேம்பர்ஸ் டவர் வளாகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் சாண்டியாகோ ஜேசு, செயலாளர் ஜ்யோதீஷ் பிள்ளை மற்றும் சிறப்பு வருந்தினர் K.S.பிள்ளை ஆகியோர் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பத்மஶ்ரீ நானம்மாளிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தன் குடும்பனத்தினரோடு கலந்துகொண்ட நானம்மாள், யோக கலையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
அவர் பேசுகையில், 'யோக கலை, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். அனைவரும் யோகாசனங்கள் செய்து, நோயில்லாத வாழ்வை பெற வேண்டும். கீரை, கம்பு, சிறுதானியம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 99 வயதிலும் தளராமல், நான் யோகா செய்வதற்கு, இயற்கை சார்ந்த உணவு பழக்கவழக்கம் தான் காரணம்' என்று கூறினார்.
அத்தோடு, உடலுக்கு வலிமை தரும் சில முக்கியமான யோகாசனங்களையும் மேடையில் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினார்.
இந்நிகழ்வில் பேசிய கோவை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சாண்டியாகோ ஜேசு, 'டில்லியில், குடியரசு தலைவர் கைகளால் பத்மஶ்ரீ விருது வாங்கிய பின், நானம்மாள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். கோவைக்கு பெருமை தேடிதந்த அவரை, ரோட்டரி சங்கம் சார்பாக முதலாவதாக கெளரவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார்.

அவினாசி ரோட்டில் அமைந்துள்ள சேம்பர்ஸ் டவர் வளாகத்தில், இன்று (வியாழக்கிழமை) மாலை விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் சாண்டியாகோ ஜேசு, செயலாளர் ஜ்யோதீஷ் பிள்ளை மற்றும் சிறப்பு வருந்தினர் K.S.பிள்ளை ஆகியோர் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' பத்மஶ்ரீ நானம்மாளிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தன் குடும்பனத்தினரோடு கலந்துகொண்ட நானம்மாள், யோக கலையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
அவர் பேசுகையில், 'யோக கலை, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். அனைவரும் யோகாசனங்கள் செய்து, நோயில்லாத வாழ்வை பெற வேண்டும். கீரை, கம்பு, சிறுதானியம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 99 வயதிலும் தளராமல், நான் யோகா செய்வதற்கு, இயற்கை சார்ந்த உணவு பழக்கவழக்கம் தான் காரணம்' என்று கூறினார்.
அத்தோடு, உடலுக்கு வலிமை தரும் சில முக்கியமான யோகாசனங்களையும் மேடையில் செய்துகாட்டி அனைவரையும் அசத்தினார்.
இந்நிகழ்வில் பேசிய கோவை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சாண்டியாகோ ஜேசு, 'டில்லியில், குடியரசு தலைவர் கைகளால் பத்மஶ்ரீ விருது வாங்கிய பின், நானம்மாள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். கோவைக்கு பெருமை தேடிதந்த அவரை, ரோட்டரி சங்கம் சார்பாக முதலாவதாக கெளரவித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார்.