நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள், கடந்த 16-ம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால், திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக நீக்க வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்கும் முறையை மாற்றி 3 வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் எனக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பிற்கு பிறகும், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- 8 சதவீத கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் உடனான சந்திப்பின் போது உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நாளை (23-ம் தேதி) முதல் திரையரங்குகள் இயங்கும். மேலும் எந்தெந்த தியேட்டர்களில் எந்த படம் உள்ளதோ அந்த திரையரங்கில் சினிமா காட்சிகள் இடம் பெறும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர், என்றார்.
கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள், கடந்த 16-ம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால், திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, கேளிக்கை வரி 8 சதவீதத்தை முழுவதுமாக நீக்க வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்கும் முறையை மாற்றி 3 வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் எனக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பிற்கு பிறகும், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- 8 சதவீத கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் உடனான சந்திப்பின் போது உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நாளை (23-ம் தேதி) முதல் திரையரங்குகள் இயங்கும். மேலும் எந்தெந்த தியேட்டர்களில் எந்த படம் உள்ளதோ அந்த திரையரங்கில் சினிமா காட்சிகள் இடம் பெறும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர், என்றார்.