கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவர் மீது பெண் கண்ணீர் மல்க புகார்

கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆதிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆதிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். 

கோவை டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரிடம் இருந்து 22 பவுன் நகை மற்றும் ரூ. 1.45 லட்சம் ரொக்கத்தையும் அபகரித்ததுடன், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆதிநாராயணன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது :- கடந்த ஓராண்டிற்கு முன்பு கோவை மாநகராட்சியின் 80-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி மத்திய மண்டல முன்னாள் தலைவருமான ஆதிநாராயணன் என்பவர் அறிமுகமானார். இளநிலை பட்டதாரியான தனக்கு மாநகராட்சியில் வேலை வாங்கித் தருகிறேன். அதுவரை தனக்கு உதவியாளராக இருக்குமாறு ஆதிநாராயணன் கூறினார். மாநகராட்சியில் தனக்கு வேலை வாங்கித் தர சிலருக்கு லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியதால், உதவியாளராக சேர்ந்த என்னிடம், 22 சவரன் நகை மற்றும் சுமார் ரூ. 1.45 லட்சம் ரொக்கத்தை ஆதிநாராயணன் பெற்றுக் கொண்டார். 

மேலும், ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று தன்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக உறவு கொண்டார். அதைத்தொடர்ந்து, பலமுறை தனியார் விடுதியில் அறை எடுத்து மதுபோதையில் வலுக்கட்டாயமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என ஆதிநாராயணன் என்னை மிரட்டினார். 8 மாதங்களுக்கு முன்பு ஆதிநாராயணன் தொல்லை தாங்க முடியாமல் விஷ மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றேன். அப்போது, ஆதிநாராயணன் தன்னிடம் மன்னிப்பு கோரியதுடன், செருப்பால் தன்னை அடித்து இவ்விஷயத்தை விட்டுவிடும்படி மன்றாடினார். 

கடந்த ஆண்டு ஆதிநாராயணனால் கருவுற்றேன். பின்னர், அவரது சிபாரிசின் பேரில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பும் செய்தேன். தன்னை மோசடி செய்த ஆதிநாராயணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்த சம்பவம் குறித்து இதுவரை கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கண்ணீர் மல்கக் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...