திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலவிய சீதோஷண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலவிய சீதோஷண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலை குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. இதனால், வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாக திருப்பூரில் நிலவி வந்த கோடைக்கால சூழல் மாறி குளிர்காற்று வீசத் துவங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலை குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. இதனால், வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாக திருப்பூரில் நிலவி வந்த கோடைக்கால சூழல் மாறி குளிர்காற்று வீசத் துவங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.