பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.
நீலகிரி: பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ''உடோபியா'' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னாள் இந்திய வெளியுறவு தூதுவர் சி.வி.ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட மாணவர்கள் கலந்து கொண்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ''உடோபியா'' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னாள் இந்திய வெளியுறவு தூதுவர் சி.வி.ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட மாணவர்கள் கலந்து கொண்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.