ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி. நிறுத்தி வைக்கப்பட்டது. வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் விரைவாக குணமடைந்து வந்தார். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். உடல்நலம் தேறி வருவதற்கு, அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ செய்தது. ஒருநாள் சிகிச்சை அல்ல. பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எதிர்பாராத சூழலில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி. நிறுத்தி வைக்கப்பட்டது. வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் விரைவாக குணமடைந்து வந்தார். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். உடல்நலம் தேறி வருவதற்கு, அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ செய்தது. ஒருநாள் சிகிச்சை அல்ல. பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எதிர்பாராத சூழலில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.