ஜெயலலிதா சிகிச்சையின் போது சி.சி.டி.வி கேமராக்கள் நிறுத்தப்பட்டன : அப்பல்லோ

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனை சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி. நிறுத்தி வைக்கப்பட்டது. வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் விரைவாக குணமடைந்து வந்தார். ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். உடல்நலம் தேறி வருவதற்கு, அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ செய்தது. ஒருநாள் சிகிச்சை அல்ல. பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எதிர்பாராத சூழலில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...