கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.
கேரளா: கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அதனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.
சட்டசபையில் உரையாற்றிய கேரள வேளாண்துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பலாப்பழத்தை நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன்தரம் குறித்து உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்த வேண்டும். இதனால், கேரளா மிகுந்த பயனடையும், என்றார். கேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்தப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால், கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் உரையாற்றிய கேரள வேளாண்துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பலாப்பழத்தை நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன்தரம் குறித்து உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்த வேண்டும். இதனால், கேரளா மிகுந்த பயனடையும், என்றார். கேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்தப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால், கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.