நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியின் கழிவு நீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தனியார் விடுதியின் கழிவு நீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

கூடலூர் அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று காலை விடுதியின் கழிவு நீர் தொட்டியில் கால் சிக்கிய நிலையில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இது குறித்து, விடுதி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியின் சமையல் அறைக்கு மிக அருகில் யானை உயிர் இழந்துள்ள நிலையில், எப்படி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரியாமல் போனது? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.