திருப்பூரில் 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். ஷெரிப் காலனி பகுதியில் நூற்பாலை நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று மாலை வெளியூர் சென்றார். அப்போது அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தை வீட்டில் தனியாக இருந்தனர். இதை நோட்டமிட்ட ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதையறிந்த ராஜேஷ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.
அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். ஷெரிப் காலனி பகுதியில் நூற்பாலை நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று மாலை வெளியூர் சென்றார். அப்போது அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தை வீட்டில் தனியாக இருந்தனர். இதை நோட்டமிட்ட ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதையறிந்த ராஜேஷ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.