கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.
கோவை: கோவையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அனுமதியின்றி மரம் வெட்ட முயற்சித்தவர்களை சூழலியல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.
சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பகுதியில் 75 வயது பழமையான மரம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக அந்த மரத்தை வெட்டுவதாக கோவையை சேர்ந்த ஓசை தன்னார்வ அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர் வருவாய்த் துறையினரின் அனுமதியின்றி மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, வருவாய் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மரம் வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டது. அந்த சாலைக்கு கோவை குற்றாலத்திற்கு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. எனவே, அந்த மரத்தை வெட்டி சாலையை அகலப்படுத்தும் தேவை இல்லை".

சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பகுதியில் 75 வயது பழமையான மரம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக அந்த மரத்தை வெட்டுவதாக கோவையை சேர்ந்த ஓசை தன்னார்வ அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர் வருவாய்த் துறையினரின் அனுமதியின்றி மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, வருவாய் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மரம் வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டது. அந்த சாலைக்கு கோவை குற்றாலத்திற்கு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. எனவே, அந்த மரத்தை வெட்டி சாலையை அகலப்படுத்தும் தேவை இல்லை".
