நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோவை மாவட்ட நரிக்குறவர்கள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோவை மாவட்ட நரிக்குறவர்கள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் நரிக்குறவர் மக்கள் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அம்மக்கள், தங்களை சாலைகளில் வியாபாரம் செய்ய கூடாது என்று போலீசார் மிரட்டுவதாகவும், தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வற்புறுத்துவதாகவும் கூறி சாட்டையால் அடித்தும், கைகளை பிளேடால் கீறியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், " எங்கள் இன மக்களை வணிக வளாகங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்." என்றனர்.
கோவை மாவட்டத்தில் நரிக்குறவர் மக்கள் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அம்மக்கள், தங்களை சாலைகளில் வியாபாரம் செய்ய கூடாது என்று போலீசார் மிரட்டுவதாகவும், தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வற்புறுத்துவதாகவும் கூறி சாட்டையால் அடித்தும், கைகளை பிளேடால் கீறியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், " எங்கள் இன மக்களை வணிக வளாகங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்." என்றனர்.