மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார்.
கோவை: மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் நடைபெற்ற வன தின விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. அவ்வாறு, மரங்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களை அடையாளம் காண ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
மரங்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க சிலர் முற்படுகிறார்கள். இதில் நாம் தலையிட்டு ஒரு நிலையான நகரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காடுகாளால் மட்டுமே புவியின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நமது காடுகள் தான் கார்பன் சேமிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவை சூழல் மாறுபாட்டில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு மரம் சுமார் 15 கிலோ எடையுள்ள தூசிகளை அகற்றுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
மக்களிடையே மரங்களை காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் நடைபெற்ற வன தின விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. அவ்வாறு, மரங்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களை அடையாளம் காண ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
மரங்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க சிலர் முற்படுகிறார்கள். இதில் நாம் தலையிட்டு ஒரு நிலையான நகரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காடுகாளால் மட்டுமே புவியின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நமது காடுகள் தான் கார்பன் சேமிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவை சூழல் மாறுபாட்டில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு மரம் சுமார் 15 கிலோ எடையுள்ள தூசிகளை அகற்றுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
மக்களிடையே மரங்களை காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.