இனி ஸ்கேன் செய்து ரயில்களின் நேரங்களை தெரிந்து கொள்ளலாம்

ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை: ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 



கோடைக்காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு மென்பொருள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த கியூ ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ரயில்களின் நேர விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். 

தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடங்களில் இந்த குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உதவியுடன் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...