ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை: ஸ்கேன் செய்வதன் மூலமாக ரயில்களின் கால அட்டவணையை தெரிந்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-

கோடைக்காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு மென்பொருள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த கியூ ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ரயில்களின் நேர விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.
தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடங்களில் இந்த குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உதவியுடன் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-

கோடைக்காலத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு மென்பொருள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த கியூ ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ரயில்களின் நேர விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.
தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடங்களில் இந்த குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் உதவியுடன் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.