இளம்பெண்ணைத் தாக்கி நகை பறித்த வாலிபர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 



உதகை வண்டிச்சோலை பகுதியில் வசிப்பவர் பிரவினா. இவர் இன்று காலை வண்டிச்சோலை சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரவினா நிலை குலைந்து கீழே விழுந்தார். 

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அந்த நபர் பறித்து கொண்டு ஓடியுள்ளார். அப்போது பிரவினாவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய அந்த நபரைப் பிடித்து உதகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டதில், குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் வசிக்கும் அபுதாஹீர் (33) ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், அபுதாஹீருக்கு மேலும் பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உள்ளதா? என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...