நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் இளம்பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த வாலிபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

உதகை வண்டிச்சோலை பகுதியில் வசிப்பவர் பிரவினா. இவர் இன்று காலை வண்டிச்சோலை சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரவினா நிலை குலைந்து கீழே விழுந்தார்.
பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அந்த நபர் பறித்து கொண்டு ஓடியுள்ளார். அப்போது பிரவினாவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய அந்த நபரைப் பிடித்து உதகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டதில், குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் வசிக்கும் அபுதாஹீர் (33) ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், அபுதாஹீருக்கு மேலும் பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உள்ளதா? என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.