திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா, அந்தப் பகுதியில் உள்ள திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.நேற்று வழக்கம் போல சிறுமி காவியப்பிரியா பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளியில் வேலை பார்க்கும் ஆயா கையில் கொதிக்கும் காபியைக் கொண்டு சென்றதாகவும், எதிர்பாராதவிதமாக காபி முழுவதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காவியப்பிரியா மீது கொட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில், சிறுமியின் உடலில் பெரும்பாலான பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி வலியால் அலறி துடித்த நிலையில், பள்ளி ஊழியர்கள் சிறுமியை மீட்டு காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தையின் பெற்றோர்கள் இதுகுறித்து கூறுகையில், "பள்ளியில் சிறுமி காபி கொட்டியதன் காரணமாக காயம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். காயம் ஏற்பட்டு உடனடியாக கூறாமல், அரைமணி நேரத்திற்கும் மேலான பின்புதான் தகவல் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டும்", என்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை முத்துசாமி, வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா, அந்தப் பகுதியில் உள்ள திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.நேற்று வழக்கம் போல சிறுமி காவியப்பிரியா பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளியில் வேலை பார்க்கும் ஆயா கையில் கொதிக்கும் காபியைக் கொண்டு சென்றதாகவும், எதிர்பாராதவிதமாக காபி முழுவதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காவியப்பிரியா மீது கொட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில், சிறுமியின் உடலில் பெரும்பாலான பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி வலியால் அலறி துடித்த நிலையில், பள்ளி ஊழியர்கள் சிறுமியை மீட்டு காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
குழந்தையின் பெற்றோர்கள் இதுகுறித்து கூறுகையில், "பள்ளியில் சிறுமி காபி கொட்டியதன் காரணமாக காயம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். காயம் ஏற்பட்டு உடனடியாக கூறாமல், அரைமணி நேரத்திற்கும் மேலான பின்புதான் தகவல் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டும்", என்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை முத்துசாமி, வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.