கொதிக்கும் காபி கொட்டியதில் 4 வயது சிறுமி படுகாயம்

திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி ஊழியரின் அலட்சியத்தால், 4 வயது சிறுமியின் உடலில் காப்பி கொட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், திருப்பூர் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குழந்தை காவியப்பிரியா, அந்தப் பகுதியில் உள்ள திருப்பூர் பப்ளிக் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள்.நேற்று வழக்கம் போல சிறுமி காவியப்பிரியா பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளியில் வேலை பார்க்கும் ஆயா கையில் கொதிக்கும் காபியைக் கொண்டு சென்றதாகவும், எதிர்பாராதவிதமாக காபி முழுவதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காவியப்பிரியா மீது கொட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதில், சிறுமியின் உடலில் பெரும்பாலான பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி வலியால் அலறி துடித்த நிலையில், பள்ளி ஊழியர்கள் சிறுமியை மீட்டு காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

குழந்தையின் பெற்றோர்கள் இதுகுறித்து கூறுகையில், "பள்ளியில் சிறுமி காபி கொட்டியதன் காரணமாக காயம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். காயம் ஏற்பட்டு உடனடியாக கூறாமல், அரைமணி நேரத்திற்கும் மேலான பின்புதான் தகவல் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டும்", என்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை முத்துசாமி, வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...