பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : பல்லடம் அருகே ஆசிட் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிமேடு அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியில் குடியிருந்து வரும் கருப்புசாமி என்பவர் சல்ப்யூரிக் ஆசிட்டை மொத்தமாக வாங்கி சலவை பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
மேலும், லாரி மூலம் வாங்கப்படும் ஆசிட்டை சேமித்து வைத்து பின்னர் யூரியாவுடன் கலந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியாவை கருப்புசாமி முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில், இன்று லாரி மூலம் சல்ப்யூரிக் ஆசிட்டை கொண்டுவந்து நிரப்பும் பணியில் கருப்புசாமி ஈடுபட்டிருந்தார். இது குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள், ஆசிட் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிமேடு அருகே அமைந்துள்ளது ஓம் சக்தி நகர். இப்பகுதியில் குடியிருந்து வரும் கருப்புசாமி என்பவர் சல்ப்யூரிக் ஆசிட்டை மொத்தமாக வாங்கி சலவை பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
மேலும், லாரி மூலம் வாங்கப்படும் ஆசிட்டை சேமித்து வைத்து பின்னர் யூரியாவுடன் கலந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியாவை கருப்புசாமி முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில், இன்று லாரி மூலம் சல்ப்யூரிக் ஆசிட்டை கொண்டுவந்து நிரப்பும் பணியில் கருப்புசாமி ஈடுபட்டிருந்தார். இது குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள், ஆசிட் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.