விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த மேட்டுப்பாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை : விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த மேட்டுப்பாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தின் முக்கிய விவசாய பகுதியாக கருதப்படும் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, சம்பரவள்ளி பகுதியில் விளை நிலங்களுக்கு கோவையை பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சாகுபடி செய்யப்பட்டு வரும் வாழை, சோளம், மற்றும் காய்கறி பயிர்வகைகள் பயிரிடுவது எப்படி? என்பது குறித்தும் விவசாயத்தின் அத்தியாவசியம் பற்றியும் மாணவர்களுக்கு நேரடியாக விளக்கி கூறப்பட்டது.
மேலும், விவசாயத்தின் உப தொழிலான கால்நடை வளர்ப்பு குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டது.
தொலைக்காட்சிகளிலும் இணையங்கள் வழியாக மட்டுமே இதுவரை கண்டு வந்த விவசாய முறைகளை நேரடியாக காணவைப்பதன் மூலம் நம்நாட்டின் முக்கிய மூலதனமே விவசாயம் தான் என்பதை உணர்த்த இயலும் என தெரிவிக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த பள்ளியின் ஆசிரியை சுதா கூறுகையில், "பள்ளிகளில் ஏட்டு அளவிலும், புகைப்படங்கள் மூலமாகவும் மட்டுமே மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்த களப்பயிற்சியின் மூலம் விவசாயம் நடைபெறும் விதம் மற்றும் விவசாயின் உழைப்பு ஆகியவற்றை நேரடியாகப் பார்க்கும் சூழல் உருவானது. இதன் மூலம் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் அதிகரிப்பதுடன் விளை நிலங்களிலில் ஒரு பொருளை உருவாக்க விவசாயிகள் படும் கஷ்டங்களை மாணவர்கள் புரிந்து கொண்டனர்." என்றார்.
கோவை மாவட்டத்தின் முக்கிய விவசாய பகுதியாக கருதப்படும் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, சம்பரவள்ளி பகுதியில் விளை நிலங்களுக்கு கோவையை பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சாகுபடி செய்யப்பட்டு வரும் வாழை, சோளம், மற்றும் காய்கறி பயிர்வகைகள் பயிரிடுவது எப்படி? என்பது குறித்தும் விவசாயத்தின் அத்தியாவசியம் பற்றியும் மாணவர்களுக்கு நேரடியாக விளக்கி கூறப்பட்டது.
மேலும், விவசாயத்தின் உப தொழிலான கால்நடை வளர்ப்பு குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டது.
தொலைக்காட்சிகளிலும் இணையங்கள் வழியாக மட்டுமே இதுவரை கண்டு வந்த விவசாய முறைகளை நேரடியாக காணவைப்பதன் மூலம் நம்நாட்டின் முக்கிய மூலதனமே விவசாயம் தான் என்பதை உணர்த்த இயலும் என தெரிவிக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த பள்ளியின் ஆசிரியை சுதா கூறுகையில், "பள்ளிகளில் ஏட்டு அளவிலும், புகைப்படங்கள் மூலமாகவும் மட்டுமே மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்த களப்பயிற்சியின் மூலம் விவசாயம் நடைபெறும் விதம் மற்றும் விவசாயின் உழைப்பு ஆகியவற்றை நேரடியாகப் பார்க்கும் சூழல் உருவானது. இதன் மூலம் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் அதிகரிப்பதுடன் விளை நிலங்களிலில் ஒரு பொருளை உருவாக்க விவசாயிகள் படும் கஷ்டங்களை மாணவர்கள் புரிந்து கொண்டனர்." என்றார்.