அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை இரு திருநங்கைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணைகளை இரு திருநங்கைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
3-ம் பாலினத்தவரின் நலனிற்காக, 40 வயதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாக 3-ம் பாலினர் நலவாரியம் அமைத்தது, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வரும் எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகிய இரண்டு 3-ம் பாலினர்களும், தங்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பட்டம் படித்தும், வயது வரம்பைக் கடந்துவிட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நேர்வாக ஏற்றுக் கொண்டது. அவர்களை அரசு மருத்துவமனைகளில் முறையே நுட்புனர் நிலை-ll மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை -ll ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
3-ம் பாலினத்தவரின் நலனிற்காக, 40 வயதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாக 3-ம் பாலினர் நலவாரியம் அமைத்தது, அரசு வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வரும் எஸ். நேயா மற்றும் எம்.பி. செல்விசந்தோசம் ஆகிய இரண்டு 3-ம் பாலினர்களும், தங்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பட்டம் படித்தும், வயது வரம்பைக் கடந்துவிட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நேர்வாக ஏற்றுக் கொண்டது. அவர்களை அரசு மருத்துவமனைகளில் முறையே நுட்புனர் நிலை-ll மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலை -ll ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.